உள்ளூர் செய்திகள்
அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றவர் கைது
பச்சைமலையில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் பச்சைமலை தென்புறநாடு பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில்கள், சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக எழுந்த புகாரின் பேரில் முசிறி டிஎஸ்பி அருள்மணி அதிரடி சோதனைக்கு உத்தர விட்டார்.
இதைத் தொடர்ந்து துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் பெரியமணி மற்றும் போலீசார் சோதனை வேட்டை நடத்தினர்
டாப்செங்காட்டுப்பட்டி, புத்தூர், சித்தூர், சேம்பூர், கம்பூர் ஆகிய பகுதிகளில் நடத்திய சோதனையில் புத்தூரை சேர்ந்த ராஜூ வயது 55 அனுமதியன்றி மது பாட்டில்கள் விற்ற போது பிடிபட்டார்.
அவரிடமிருந்து 23 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் பேரில், உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜூவை கைது செய்துள்ளனர்.
டாப்செங்காட்டுப்பட்டியிலுள்ள பெட்டிக்கடையில் குட்கா விற்பது கண்டறியப்பட்டு, கடை உரிமையாளர் மணி வயது 34 மீது உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.