செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை-போக்சோவில் வாலிபர் கைது
ஆசை வார்த்தை கூறி பலமுறை சிறுமிக்கு ராஜாமுகமது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
உடுமலை:
உடுமலை பகுதியை சேர்ந்தவர் ராஜாமுகமது (வயது 38). இவர் அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் பழகி வந்தார். மேலும் ஆசை வார்த்தை கூறி பலமுறை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து உடுமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராஜாமுகமதுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.