ஆன்மிகம்
அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோவில்

குழந்தை பாக்கியம், திருமண தடை நீக்கும் கோவில்

Published On 2021-06-08 08:49 GMT   |   Update On 2021-06-08 08:49 GMT
இந்த கோவில் மிகவும் பழமையானது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர்மீது வைகாசி, மார்கழி மாதங்களில் சூரிய ஒளி படுவது சிறப்பு.
சிவனின் பெயர்   : புண்ணியகோடியப்பர்
அம்மனின் பெயர் :  அபிராமி
தல விருட்சம்     : கஸ்தூரி அரளி

கோவில் திறக்கும் : காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

இந்த கோவில் 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது. இது 270 வது தேவாரத்தலம் ஆகும். தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274 என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் திருவிடைவாய் தலத்திற்காக சம்பந்தர் பாடல்கள் 1917ல் கண்டுபிடிக்கப்பட்டு, தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் கடைசியாக சேர்க்கப்பட்டு 275வது தலமானது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர்மீது வைகாசி, மார்கழி மாதங்களில் சூரிய ஒளி படுவது சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வேண்டிகொள்கிறார்கள்.

முகவரி :  அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில்,
திருவிடைவாசல் - 613 702, அத்திக்கடை வழி,
குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்
Ph:  04366-232 853,94433 32853, 99431 52999
Tags:    

Similar News