ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தி

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தரிசன நேரம் நீட்டிப்பு

Published On 2020-11-03 08:58 GMT   |   Update On 2020-11-03 08:58 GMT
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசன நேரத்தை அதிகரித்து இருப்பதாக கோவில் நிர்வாக அதிகாரி டி.பெத்திராஜு தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஆந்திர மாநிலத்தில் கடந்த ஜூலை மாதத்திலிருந்து அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் கடந்த ஜூலை 16-ந் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள், சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று முதல் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசன நேரத்தை அதிகரித்து இருப்பதாக கோவில் நிர்வாக அதிகாரி டி.பெத்திராஜு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News