கார்
மெர்சிடிஸ் பென்ஸ் கார்

ஜனவரி 2022 முதல் விலையை உயர்த்தும் மெர்சிடிஸ் பென்ஸ்

Published On 2021-12-04 09:00 GMT   |   Update On 2021-12-04 09:00 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.


மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரீடெயில் ஆப் தி பியூச்சர் வியாபார பிரிவில் ஆயிரம் கார்களை விற்பனை செய்தது. இதனை கொண்டாடும் வகையில் ஆயிரமாவது யூனிட் சாவியை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்டின் ஸ்கிவென்க் வாடிக்கையாளரிடம் வழங்கினார். 

மெர்சிடிஸ் பெனஸ் இந்தியா தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்கள் விலையை ஜனவரி 1, 2022 முதல் உயர்த்துகிறது. இம்முறை கார்களின் விலை இரண்டு சதவீதம் வரை உயர்த்தப்பட இருக்கிறது. கார் உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதே விலை உயர்வுக்கு காரணமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 



ஏற்கனவே பென்ஸ் கார்களை முன்பதிவு செய்தவர்கள், டிசம்பர் 31, 2021 வரை புதிய கார்களை முன்பதிவு செய்வோருக்கு தற்போதைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர பென்ஸ் ஜி.எல்.இ.400 மற்றும் ஜி.எல்.இ.400டி எஸ்.யு.வி.க்களை முன்பதிவு செய்தவர்களுக்கும் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
Tags:    

Similar News