செய்திகள்
புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் உற்சாக குளியல்

புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் உற்சாக குளியல்

Published On 2021-10-26 02:05 GMT   |   Update On 2021-10-26 02:30 GMT
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் கோவில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி நீச்சல் குளத்தில் இறங்கி தண்ணீரில் படுத்து குளித்து மகிழ்ந்தன.
திருச்சி :

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டாள், லட்சுமி ஆகிய 2 யானைகள் உள்ளன.

இந்த யானைகள் குளிப்பதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில் கோவிலுக்கு சொந்தமான உடையவர் தோப்பில் 56 அடிநீளம், 56 அடி அகலம் மற்றும் 6.5 அடி உயரத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீச்சல் குளம் ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது.

நேற்று இந்த நீச்சல் குளத்தில் கோவில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகியவற்றை இறக்கி குளிக்க வைத்து பார்க்கப்பட்டது.

அப்போது 2 யானைகளும் உற்சாகமாக நீச்சல் குளத்தில் இறங்கி தண்ணீரில் படுத்து குளித்து மகிழ்ந்தன.
Tags:    

Similar News