செய்திகள்
கோப்புப்படம்.

விதிகளை மீறும் வாகனங்களால் விபத்து அபாயம்

Published On 2021-07-18 08:30 GMT   |   Update On 2021-07-18 08:30 GMT
குறிப்பாக திருப்பூர் பி.என்., ரோடு, புஷ்பா சந்திப்பு முதல் 60 அடி ரோடு சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக பின்பற்றப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் என்பது  பெரும் தலைவலியாக உள்ளது.  இதனால் பெரும்பாலான பொதுமக்கள்  வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர்.

  திருப்பூர் மாநகரை பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் ஒருவழிப்பாதையே உள்ளது.இதனால் ஒன்றன்பின் ஒன்றாகவே வாகனங்கள்  செல்ல முடியும்.

குறிப்பாக   திருப்பூர் பி.என்., ரோடு, புஷ்பா சந்திப்பு முதல் 60 அடி ரோடு சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக பின்பற்றப்படுகிறது. தெற்கு நோக்கி வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலான நேரங்களில் எதிர் திசையில் கார்,  மோட்டார் சைக்கிள்  என அனைத்து வாகனங்களும் செல்கின்றன. மில்லர் ஸ்டாப்
முதல் 60 அடி ரோடு வரை உள்ள குறுக்கு வீதிகளில் வரும் வாகனங்கள் தான் பெருமளவு இந்த விதிமீறலில் ஈடுபடுகின்றன. இதனால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.

பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே  போலீசார்  அப்பகுதியில்   கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை  எழுந்துள்ளது. 
Tags:    

Similar News