செய்திகள்
கைது

பாபநாசம் அருகே தென்னைமரம் வெட்டுவதில் தகராறு- முதியவர் உள்பட 3 பேர் கைது

Published On 2021-04-18 09:29 GMT   |   Update On 2021-04-18 09:29 GMT
பாபநாசம் அருகே தென்னைமரம் வெட்டுவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் முதியவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாபநாசம்:

பாபநாசம் அருகே அரையபுரம் தட்டு மால் படுகை பகுதியில் வசித்து வருபவர் நடராஜன் (வயது 72) விவசாயி, இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சூர்யா (23). சூர்யாவுக்கு சொந்தமான தென்னைமரம் நடராஜன் வீட்டு மேல் மாடியில் சாய்ந்த நிலையில் வளர்ந்து தேங்காய், மட்டை விழுந்துள்ளது. 

இந்த மரத்தை வெட்ட சொல்லி நடராஜன் கூறியுள்ளார். அதற்கு சூர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடராஜனுக்கு, சூர்யா கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து பாபநாசம் போலீசில் இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, சப்இன்ஸ்பெக்டர் செல்வராணி வழக்குப்பதிவு செய்து சூர்யா, நடராஜன் மற்றும் ரமேஷ் (28) ஆகிய மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News