வழிபாடு
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் கைசிக புராணம் வாசிப்பு

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் கைசிக புராணம் வாசிப்பு

Published On 2021-12-18 04:27 GMT   |   Update On 2021-12-18 04:27 GMT
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் உற்சவர் கள்ளபிரான் ஸ்ரீதேவி பூதேவி தாயார், தனித் தாயார் வைகுண்ட நாயகி சோழநாத நாயகி ஆகியோருடன் சயன குறட்டில் எழந்தருளி திருவாராதனம் நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி திருக்கோவிலில் கைசிக புராணம் வாசிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூபம், 7 மணிக்கு மூலவருக்கு பால் திருமஞ்சனம் 8 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சணம் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் கள்ளபிரான் ஸ்ரீதேவி பூதேவி தாயார், தனித் தாயார் வைகுண்ட நாயகி சோழநாத நாயகி ஆகியோருடன் சயன குறட்டில் எழந்தருளி திருவாராதனம் நடைபெற்றது.

புராணம் ஏட்டினை சுவாமி பாதத்தில் வைத்து கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி கைசிக புராணம் படித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு நிர்வாக அதிகாரி (பொறுப்பு) ராதா, ஆய்வாளர் நம்பி, ஸ்தலத்தார்கள் சீனிவாசன், திருவேங்கடத்தான், சீனிவாசன், அர்ச்சகர்கள், ரமேஷ், வாசு, ராமானுஜம், சீனு, அத்தியாபகர்கள் மன்னார், சீனிவாச தாத்தம், சீனிவாசன், ராமானுஜம், பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News