ஆன்மிகம்
பெரிய மாரியம்மன் கோவிலில் பங்குனி பவுர்ணமி திருவிழா

பெரிய மாரியம்மன் கோவிலில் பங்குனி பவுர்ணமி திருவிழா

Published On 2021-03-19 05:58 GMT   |   Update On 2021-03-19 05:58 GMT
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ராமநாதபுரம் பெரிய மாரியம்மன் கோவிலில் பங்குனி பவுர்ணமி திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ராமநாதபுரம் பெரிய மாரியம்மன் கோவிலில் பங்குனி பவுர்ணமி திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

வருகிற 28-ந் தேதி வரை நடைபெறும் பங்குனி பவுர்ணமி திருவிழாவில் தினமும் இரவு அம்மன் முக்கிய வீதிகளில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியாரின் உத்தரவின்பேரில் திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராமு, ஆலய விசாரணைதாரர் கண்ணன், ஆலய பூஜகர்கள் ராஜா, மணிகண்டன், கார்த்திகேயன், நாகராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News