செய்திகள்
ஆர்.பி.ஐ.

ரிசர்வ் வங்கியின் புதிய முதலீட்டு திட்டம் - இப்படியொரு சலுகையா?

Published On 2021-09-07 05:18 GMT   |   Update On 2021-09-07 05:18 GMT
சிறிய தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறும் தகவல் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சமூக வலைதளங்களில் வெளியாகும் போலி செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. போலி செய்திகளுடன், நிதி சலுகைகள் பெயரில் மக்களை ஏமாற்றும் பல்வேறு மோசடி திட்டங்கள் பற்றிய பதிவுகளும் வலைதளங்களில் அதிகரித்து வருகின்றன.

ரிசர்வ் வங்கியின் முதலீடு திட்டம் மக்களுக்கு பலமடங்கு லாபம் ஈட்டி தரும் என கூறும் பதிவு வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில், ரிசர்வ் வங்கியின் புதிய முதலீடு திட்டத்தில் ரூ. 12,500 முதலீடு செய்தால், ரூ. 4 கோடி 62 லட்சமாக திரும்ப பெறலாம் என கூறப்பட்டுள்ளது. 



மேலும் ஆன்லைன் வங்கி மேலாளர் தொகையை 30 நிமிடங்களில் பரிமாற்றம் செய்வார் என்றும் அந்த பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முதலீட்டு திட்டம் பற்றிய வைரலாகும் தகவலை பொது மக்கள் நம்ப வேண்டாம் என மத்திய அரசு நிறுவனமான பி.ஐ.பி. தெரிவித்து உள்ளது. 

அந்த வகையில் ரிசர்வ் வங்கி முதலீட்டு திட்டம் என வைரலாகும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது. 

Tags:    

Similar News