செய்திகள்
மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை - மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார்
காரைக்குடி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய மாணவன் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள ஒ.திருவயல் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னழகு. இவரது மகன் அசோக் (வயது 15). அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அசோக் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பெற்றோர் தேடியும் பலன் கிடைக்கவில்லை.
இரவில் மழை பெய்ததால் காலையில் அசோக் வீடு திரும்புவான் என உறவினர்கள் கருதினர்.
இந்த நிலையில் அங்குள்ள பழைய கட்டிடத்தில் தூக்கில் அசோக் பிணமாக தொங்குவதாக தகவல் பரவியது.
குன்றக்குடி போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அசோக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அசோக் எதற்காக தற்கொலை செய்தான்? என்பது மர்மமாக உள்ளது. இதற்கிடையே தூக்கில் தொங்கிய அசோக்கின் கால் தரையை தொட்டபடி இருந்ததால், அவன் தற்கொலை செய்தானா? அல்லது யாராவது கடத்திக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி அருகே உள்ள ஒ.திருவயல் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னழகு. இவரது மகன் அசோக் (வயது 15). அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அசோக் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பெற்றோர் தேடியும் பலன் கிடைக்கவில்லை.
இரவில் மழை பெய்ததால் காலையில் அசோக் வீடு திரும்புவான் என உறவினர்கள் கருதினர்.
இந்த நிலையில் அங்குள்ள பழைய கட்டிடத்தில் தூக்கில் அசோக் பிணமாக தொங்குவதாக தகவல் பரவியது.
குன்றக்குடி போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அசோக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அசோக் எதற்காக தற்கொலை செய்தான்? என்பது மர்மமாக உள்ளது. இதற்கிடையே தூக்கில் தொங்கிய அசோக்கின் கால் தரையை தொட்டபடி இருந்ததால், அவன் தற்கொலை செய்தானா? அல்லது யாராவது கடத்திக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.