செய்திகள்
புதுச்சேரியில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி சந்தித்து பேசினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து பெரும்பாலான தொகுதிகளை ரங்கசாமி கைப்பற்றினார்.
இந்தநிலையில் பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க ரங்கசாமி தமது எம்.எல்.ஏ.க்களுடன் ஆதரவு கோரினார்.
இதனையடுத்து ஆட்சியமைக்க ரங்கசாமிக்கு தமிழிசை செளந்தரராஜன் அழைப்பு விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தேதி அறிவித்தவுடன் பதவியேற்பு விழா நடைபெறும் என்று கூறினார்.