செய்திகள்
கைது

கோவையில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- அக்காள் கணவர் கைது

Published On 2021-04-13 17:41 GMT   |   Update On 2021-04-13 17:41 GMT
கோவையில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அக்காள் கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கவுண்டம்பாளையம்:

கோவை கவுண்டம் பாளையம் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்த 41 வயது பெண். இவரது கணவர் 16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவர் மூலமாக பெண்ணுக்கு 21,20 வயதில் 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கு திருமணம் ஆகி விட்டது.

இந்தநிலையில் பெண் 2-வதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டு சூலூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் தங்கி இருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவர் மூலமாக பெண்ணுக்கு 13, 9 வயதில் 2 மகள்கள் உள்ளனர். பெண்ணின் தாத்தா தனது 2-வது மகள் வீட்டில் வசித்து வருகிறார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இதனையடுத்து பெண் தனது 9 வயது மகளுடன் தனது தாத்தாவை பார்ப்பதற்காக இடையர்பாளையத்தில் உள்ள தனது 2- வது மகள் வீட்டிற்கு கடந்த 1 மாதங்களுக்கு முன் சென்றார். அப்போது தனது மகளை அங்கேயே விட்டு விட்டு சூலூருக்கு திரும்பினார்.

இந்தநிலையில் அக்காவின் வீட்டில் இருந்த 9 வயது சிறுமிக்கு அவரது கணவர் சக்திவேல் (36). சமையல் தொழிலாளி என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். மேலும் சிறுமியை நிர்வாணமாக்கி தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்து இருந்தார். சக்திவேலின் மனைவி அவரது செல்போனை பார்த்த போது தனது தங்கையை அவர் நிர்வாணமாக்கி போட்டோ எடுத்து வைத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் தனது கணவரிடம் கேட்ட போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறினார். அவர் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் சிறுமியின் அக்கள் கணவர் சக்திவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News