செய்திகள்
பணம் திருட்டு

தேனி அருகே பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை

Published On 2020-01-07 08:02 GMT   |   Update On 2020-01-07 08:02 GMT
தேனி அருகே வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:

தேனி மாவட்டம் ஆனைமலையான்பட்டியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் பாண்டியன் (வயது 55). இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் சர்ச்சுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் அவரது மனைவி தூங்கிக்கொண்டு இருந்தார்.

சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது தனது அருகில் வைத்திருந்த பீரோ சாவியை காணவில்லை. அதன் பிறகு பல இடங்களில் தேடியும் சாவியை காணவில்லை. இதனையடுத்து மாற்று சாவி தயார் செய்ய முடிவு செய்தனர்.

2 நாட்கள் கழித்து சாவி தயாரித்து பீரோவை திறந்தபோது உள்ளே இருந்த 16½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.48 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஜேம்ஸ் பாண்டியன் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News