செய்திகள்
புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

திசையன்விளையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை - பொதுமக்கள் போராட்டம்

Published On 2019-11-06 11:39 GMT   |   Update On 2019-11-06 11:39 GMT
திசையன்விளையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திசையன்விளை:

திசையன்விளை முருகேசபுரத்தில் நேற்று முன்தினம் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையின் அருகே பஸ் நிறுத்தம், கோவில் ஆகியவை உள்ளன. கோவில், பஸ்நிறுத்தத்திற்கு வரும் பொதுமக்களுக்கு டாஸ்மாக் கடையால் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே அந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி முருகேசபுரம் பொதுமக்கள் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களை இதுதொடர்பாக தாசில்தாரிடம் மனு கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

இதையடுத்து பொதுமக்கள் திசையன்விளை தாசில்தாரிடம் மனு கொடுக்க சென்றனர். அங்கு தாசில்தார் இல்லாததால் துணை தாசில்தார் ரமே‌ஷிடம் கோரிக்கை அடங்கிய மனுவை பொதுமக்கள் அளித்தனர். டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News