செய்திகள்
கோப்புபடம்

சேவா பாரதி சார்பில் ஏழைகளுக்கு உணவு

Published On 2021-05-18 05:29 GMT   |   Update On 2021-05-18 05:29 GMT
ஏழைகள், கொரோனா பாதித்து வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு உணவு சமைத்து வழங்க திருப்பூர் மாவட்ட சேவாபாரதி முடிவு செய்துள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட சேவாபாரதி தலைவர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா இரண்டாவது அலை உருவாகியுள்ளதை யடுத்து திருப்பூர் மாவட்டத்தில் சேவாபாரதி சேவை பணிகளை மீண்டும் செயல்படுத்தி வருகிறது. கொரோனா பாதித்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஏழைகள், முன்கள பணியாளர்களுக்கு தினமும் உணவு வழங்க ஏற்படு செய்யப்பட்டுள்ளது. ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் உணவு சமைத்து, தேவைப்படுவோருக்கு இருப்பிடத்துக்கே கொண்டு சென்று பாதுகாப்பான முறையில் வழங்கப்படும்.

தன்னார்வலர்கள், தொழில் துறையினர், பொதுமக்கள், உணவு சமைக்க தேவையான காய்கறி, பால், மளிகை பொருட்கள் என தங்களால் இயன்ற பொருட்களை நன்கொடையாக, ஹார்வி குமாரசாமி மண்டபத்துக்கு அனுப்பி வைக்கலாம். Seva Bharthi Then Tamilnadu, A/C No: 259211100003484, Ifsc Code: UBIN0825921, Union Bank, Dharapuram road, Tirupur என்கிற சேவா பாரதியின் வங்கி கணக்கிற்கு பணமாகவும் அனுப்பி வைக்கலாம்.மேலும் விவரங்களுக்கு 98942 11005, 96594 41487, 97902 11711 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் அளிக்கும் சிறு நிதி பல ஏழை மக்களுக்கு உணவு அளிக்க உதவும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News