உள்ளூர் செய்திகள்
விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள பனை ஓலைகள்.

உடன்குடியில் பனை ஓலை விற்பனை மும்முரம்

Published On 2022-01-08 11:26 GMT   |   Update On 2022-01-08 11:26 GMT
உடன்குடியில் பொங்கல் பண்டிகையையொட்டி பனை ஓலை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
உடன்குடி:

உடன்குடி வட்டார நகர பகுதிக்குட்பட்ட பரமன்குறிச்சி, குலசேகரபட்டினம், தண்டுபத்து, சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, கொட்டங்காடு, வேப்பங்காடு, தாண்டவன்காடு, மாதவன்குறிச்சி, பெரியபுரம், சிறுநாடார்குடியிருப்பு உட்பட்ட 100&க்கு மேற்பட்ட கிராம பகுதிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு காய்ந்த பனை ஓலை விற்பனை இப்போது தீவிரமாக நடக்கிறது.

ஆங்காங்கே பல இடங்களில் பனை ஓலைகளை விற்பனைக்காக குவித்து வைத்து ஒரு ஓலை ரூ.15 வரை விற்பனை செய்கின்றனர்.

வீட்டுக்கு முன்பு பொங்கல் வைத்து பொங்கல் இடுபவர்கள் பனை ஓலைகளை அதிகமாகப் பயன்படுத்துவார்கள் பனை ஓலை வைத்து பொங்கலிட்டு பொங்கிவரும் போதும் பொங்கலோ பொங்கல் என்று குடும்பத்தோடு சேர்ந்து உற்சாகமாக குரல் கொடுப்பார்கள்.

அதனால் பொங்கல் திருவிழாவில் வீட்டுக்கு வீடு இடம்பெறும் பனை ஓலை முக்கியமான பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News