செய்திகள்
நாகூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்:
நாகூர் கடைத் தெருவில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற நாகூர் போலீசார் அங்கு லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகூர் மியாத் தெருவை சேர்ந்த இப்ராகிம்(வயது54) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.