செய்திகள்
தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை

Published On 2021-09-18 09:58 GMT   |   Update On 2021-09-18 09:58 GMT
கோவையில் வேலை கிடைக்காத விரக்தியில் மனமுடைந்த என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குனியமுத்தூர்:

கோவை ஈச்சனாரி அருகே உள்ள பினோ காலனியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் விக்னேஷ்குமார் (வயது 26). என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் அமேசான் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார்.

கொரோன பரவல் காரணமாக கடந்த வருடம் விக்னேஷ்குமாரை நிறுவனத்தினர் வேலையை விட்டு நீக்கினர். வேலையில்லாமல் இருந்த அவர் பல்வேறு இடங்களில் வேலை தேடினார். ஆனால் எந்த வேலையும் கிடைக்கவில்லை. இதன்காரணமாக விக்னேஷ்குமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட விக்னேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News