செய்திகள்
மழை

திருச்சி, பெரம்பலூர், கரூரில் பரவலாக மழை

Published On 2019-09-16 16:15 GMT   |   Update On 2019-09-16 16:15 GMT
திருச்சி, பெரம்பலூர் மற்றும் கரூரில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரம்பலூர்:

தமிழகத்தில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றிரவு பல இடங்களில்  பரவலாக மழை பெய்தது. இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை இரவு முழுவதும் பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குரும்பலூர், அம்மாபாளையம்,  அரும் பாவூர், நக்கசேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய் தது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த மழை மில்லிமீட்டரில் வருமாறு:-

செட்டிக்குளம்-2, பாடாலூர்-5, அகரம்சிகூர்-4, லப்பைக்குடிகாடு-5, புது வேட்டக்குடி-3, எறையூர்-14, பெரம்பலூர்-42, கிருஷ்ணாபுரம்-2, தழுதாழை-6, வி.களத்தூர்- 6 என மொத் தம் 101 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் நேற்றிரவு 7 மணிக்கு தொடங்கிய மழை இரவு 10 மணி வரை பெய்தது. கரூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:- 

கரூர்-2.2, அணைப்பாளையம்-3, குளித்தலை-12, கிருஷ்ணராயபுரம்- 21.4, மாய னூர்-24, பஞ்சப்பட்டி-5.4, கடவூர்-4,  பாலவிடுதி-4.1 மில்லி மீட்டராகும்.

இதேபோல் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் இரவு வரை மழை பெய்தது.
Tags:    

Similar News