செய்திகள்
கைது

சீர்காழியில் சொகுசு கார், ஆட்டோவில் மதுபானம் கடத்தி வந்த 5 பேர் கைது

Published On 2021-11-18 10:54 GMT   |   Update On 2021-11-18 10:54 GMT
சீர்காழியில் சொகுசு கார், ஆட்டோவில் மதுபானம் கடத்தி வந்தது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:

சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அர்ஜுனன், தில்லை நடராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் சீர்காழி பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக சீர்காழி நோக்கி வந்த இனோவா சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் 180 மில்லி அளவு கொண்ட புதுச்சேரி மாநில 140 மதுபான பாட்டில்கள் இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த சட்டநாதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜா (28), சீர்காழி தென்பாதி வவுசி நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (20), தென்பாதி எம் ஆர் ராதா நகரைச் சேர்ந்த வினோத் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக தப்பி ஓடிய திருக்கோலக்கா பகுதியை சேர்ந்த நபரை தேடி வருகின்றனர். இதேபோல் சீர்காழி ரெயில்வே ரோடு பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். ஆட்டோவில் புதுச்சேரி மாநிலம் மதுபான பாட்டில்கள் 148 இருந்ததை கைப்பற்றி ஆட்டோவில் வந்த சீர்காழி சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த சங்கர் (26) அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (68) ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News