செய்திகள்
ஸ்டாலின், கெஜ்ரிவால்

அதிக இடங்களில் முன்னணி: முக ஸ்டாலினுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து

Published On 2021-05-02 09:40 GMT   |   Update On 2021-05-02 09:40 GMT
திமுக ஆட்சியமைக்க போதுமான இடங்களுக்கும் அதிகமான இடங்களில் முன்னணி வகிக்கும் நிலையில், முக ஸ்டாலினுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடக்கத்தில் இருந்தே திமுக கூட்டணி அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி ஆட்சியை அமைக்க அதிகமான வாய்ப்பு உள்ளது.

திமுக கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார். திமுக வெற்றி பெறக்கூடிய நிலையில், டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் பக்கத்தில் ‘‘தமிழக சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். வெற்றிகரமாக பதவி காலத்தை முடிக்க எனது வாழ்த்துக்கள். அதேபோல் மக்களின் எதிர்பார்ப்புகளை சிறப்பான வகையில் நிறைவேற்றவும் வாழ்த்துக்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News