செய்திகள்
மாயம்

காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்

Published On 2021-08-14 10:17 GMT   |   Update On 2021-08-14 10:17 GMT
ஏர்வாடி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மாயமானது தொடர்பாக கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:

குமரி மாவட்டம், கொட்டாரம் அருகே உள்ள லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (25). கட்டிட தொழிலாளி. இவரும், ஏர்வாடி அருகே உள்ள கோசல்ராம்நகர், வடக்கு காலனிதெருவை சேர்ந்த முத்துசெல்வி (24) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் கிருஷ்ணகுமார் மாமனார் வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்நிலையில் கிருஷ்ணகுமாருக்கும், முத்து செல்விக்கும் குடும்ப பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 6 மாதங்களாக முத்துசெல்வி கணவர் கிருஷ்ணகுமாருடன் பேச்சுவார்த்தை எதுவும் இல்லாமல் இருந்து வந்தார். இதற்கிடையே கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்த முத்துசெல்வி திடீரென மாயமானார்.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணகுமார் உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் முத்து செல்வி குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனைதொடர்ந்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மாயமான முத்துசெல்வியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News