லைஃப்ஸ்டைல்
காய்கறிகளை சமைக்கும் முன் இதை செய்ய மறக்காதீங்க...

காய்கறிகளை சமைக்கும் முன் இதை செய்ய மறக்காதீங்க...

Published On 2021-02-15 08:51 GMT   |   Update On 2021-02-15 08:51 GMT
காய்கறிகளை விளைவிக்கும் தோட்டங்களில், விளைச்சலுக்காகவும், அவைகளை பூச்சி, வண்டுகள் தாக்காமல் இருக்கவும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பர். எனவே சமைப்பதற்கு முன், காய்கறிகளை என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
நாம் அன்றாட உணவில் ஏராளமான காய்கறிகளை பயன்படுத்திவருகிறோம். காய்கறிகளை விளைவிக்கும் தோட்டங்களில், விளைச்சலுக்காகவும், அவைகளை பூச்சி, வண்டுகள் தாக்காமல் இருக்கவும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பர். அதை அப்படியே சமைத்து சாப்பிட்டால் விஷத்தின் தாக்குதல் ஏற்பட்டு, பல்வேறு நோய்கள் தோன்றும். எனவே சமைப்பதற்கு முன், காய்கறிகளை நன்றாக கழுவ வேண்டும்.

புதினா, கறிவேப்பிலை, கீரை போன்றவற்றை சமைக்கும் முன்பு, ஒரு லிட்டர் தண்ணீரில் 20 மில்லி வினிகர் கலந்த திரவத்தில் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 30 கிராம் அளவுக்கு புளி கலந்த திரவத்தில் அவைகளை பத்து நிமிடம் வைத்திருங்கள். பின்பு நன்றாக அலசி எடுத்துவிட்டு மீண்டும் தண்ணீரில் சுத்தமாக கழுவி பயன்படுத்துங்கள்.

முட்டைகோஸ் வாங்கியதும் அதன்மேல் பகுதியில் இருக்கும் மூன்று அல்லது நான்கு அடுக்கு இதழ்களை அப்புறப்படுத்திவிடுங்கள். பின்பு நீரில் கழுவிவிட்டு, சுத்தமான துணியால் துடைத்துவிட்டு பயன்படுத்துங்கள்.

நெல்லிக்காய், கோவக்காய், புடலை போன்றவைகளை மென்மையான ஸ்கிரப் பேடு பயன்படுத்தி தேய்த்து கழுவுங்கள். பின்பு முதலில் சொன்ன ஏதாவது ஒரு திரவத்தில் பத்து நிமிடம் முக்கிவைத்துவிட்டு, துடைத்து பயன்படுத்துங்கள்.

மல்லித்தழையில் வேர் பகுதியை நீக்கிவிட்டு, சமையலுக்கு பயன்படுத்தும் பகுதியை மட்டும் தனியாக கிள்ளி எடுங்கள். அதை டிஸ்யூ பேப்பரிலோ, காற்று புகத்தகுந்த காட்டன் துணியிலோ சுற்றி, பிளாஸ்டிக் பாத்திஇஇரத்த ில் கொட்டி பிரிட்ஜில் வைத்திருங்கள். உபயோகப்படுத்துவதற்கு பத்து நிமிடம் முன்பு வினிகர் கலவையில் முக்கிவைத்து, பின்பு நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்துங்கள்.

முருங்கைக்காய், பீட்ரூட், கேரட் போன்றவற்றை நன்றாக அலசி தண்ணீரில் கழுவுங்கள். பின்பு தண்ணீரை துடைத்துவிட்டு, காட்டன் துணியை சுற்றி பிரிட்ஜில் வையுங்கள். உபயோகிப்பதற்கு முன்பு வெளியே எடுத்து, மேல் தோலை சுரண்டி விட்டு மீண்டும் கழுவி பயன்படுத்துங்கள்.

வெண்டைக்காய், கத்தரி, வெள்ளரி, பாகற்காய், சுரைக்காய்களை பிரஷ் மூலம் லேசாக உரசி தண்ணீரில் கழுவுங்கள். சில தடவை தண்ணீரில் அலசி, வினிகர் அல்லது புளி திரவத்தில் பத்து நிமிடங்கள் முக்கிவைத்து, கழுவி பயன்படுத்துங்கள்.

பூண்டு, சிறிய வெங்காயம், இஞ்சி போன்றவைகளில் இருக்கும் மேல் தோலை நீக்கிவிட்டு நீரில் கழுவிவிட்டு உபயோகப்படுத்தவேண்டும்.
Tags:    

Similar News