செய்திகள்
வார்னே

பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: இந்த இரண்டு அணிகளை தவிர்த்துவிட முடியாது- வார்னே

Published On 2020-09-30 16:54 GMT   |   Update On 2020-09-30 16:54 GMT
ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு நடப்பு சாம்பியன், முன்னாள் சாம்பியன் அணிகளை தவிர்த்துவிட முடியாது என்று ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் தொடங்கியதுமே எந்தெந்த அணிகள் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும் என்பதை எளிதாக கணித்து விடலாம். ஆனால் இந்த முறை இதுவரை 11 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 8 அணிகளுமே குறைந்தது ஒரு வெற்றியாவது பெற்றுள்ளன.

இதனால் பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பை கணிப்பது கடினமானது எனத் தோன்றுகிறது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகருமான ஷேன் வார்னே பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து கணித்துள்ளது.

வார்னே பினேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து கூறுகையில் ‘‘நான்கு அணிகள், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதில் இடமுண்டு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கடந்து செல்வது கடினமானது என்று நினைக்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் எப்போதும் பிளே ஆஃப்ஸ் சுற்றில் இருக்கும். அல்லது இருந்திருக்கும்.

மும்பை இந்தியன்ஸ் அணியும் தகுதி பெறும். அவர்கள் மிகவும் பேலன்ஸ் அணியை கொண்டுள்ளனர். அடுத்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை நோக்கி சார்ந்திருக்க வேண்டும். ஏராளமான பையர்பவர் பெற்றுள்ளது. ஆகவே, 4-வது அணியாக அது இருக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News