செய்திகள்
கைது

காரைக்குடியில் பெண்களிடம் நகை பறித்த முகமூடி கொள்ளையர்கள் கைது

Published On 2021-08-29 09:41 GMT   |   Update On 2021-08-29 09:41 GMT
காரைக்குடியில் பெண்களிடம் நகை பறித்த முகமூடி கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வள்ளுவர் நகர் பர்மா காலனியில் வசிப்பவர் மீனாள். இவரது மகள் 4 மாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா. தனது 2 குழந்தைகளுடன் ஒரு மாதத்துக்கும் மேலாக தாய் வீட்டில் தங்கியுள்ளார்.

கடந்த 16-ந் தேதி கர்ப்பிணியான ஐஸ்வர்யாவை பரிசோதனை செய்ய செவிலியர் சாந்தியை அழைத்துள்ளார்.

மீனாள் வீட்டுக்கு வந்த செவிலியர் ஐஸ்வர்யாவை பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த 4 கொள்ளையர்கள் கத்தியுடன் வீட்டிற்குள் புகுந்து ஐஸ்வர்யா அவரது தாயார் மீனாள், செவிலியர் சாந்தி மற்றும் குழந்தைகள் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

இதுகுறித்து மீனாள் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு முகமூடி கொள்ளையர்களை தேடி வந்தனர்

நேற்று நள்ளிரவு இந்த சம்பவத்தில் தொடரபுடைய காரைக்குடி முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமு (20), திருப்பத்தூரை சேர்ந்த சிவா (22) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News