செய்திகள்
பூதலூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து விவசாயி பலி
பூதலூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி:
பூதலூர் அருகே உள்ள சித்திரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது51). விவசாயி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் பூதலூருக்கு வந்து விட்டு சித்திரக்குடிக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பூதலூர்-சித்திரக்குடி இடையே உள்ள பனந்தோப்பு என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணிகண்டனின் மனைவி சரிதா பூதலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.