செய்திகள்
தொழிலாளர்களை தேடிச்சென்று தடுப்பூசி போடப்பட்டது.

ஆலங்காயத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-09-07 22:11 GMT   |   Update On 2021-09-07 22:11 GMT
நரசிங்கபுரம், புலுகூர்பள்ளி கிராமங்களில் தொழிலாளர்களை தேடிச்சென்று தடுப்பூசி போடப்பட்டது.
வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, வருவாய் ஆய்வாளர் தேவேந்திரன் ஆகியோர் தலைமையில், நரசிங்கபுரம், புலுகூர்பள்ளி கிராமங்களில் தொழிலாளர்களை தேடிச்சென்று தடுப்பூசி போடப்பட்டது.

இந்த பணிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி பானுமதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா மற்றும் சுகாதாரத் துறையினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News