செய்திகள்
அபராதம்

முக கவசம் அணியாதகடை உரிமையாளர்களுக்கு அபராதம்

Published On 2021-07-24 10:04 GMT   |   Update On 2021-07-24 10:04 GMT
முக கவசம் அணியாத 6 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.100 வீதம் ரூ.600 அபராதமாக விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில், சுகாதார துறை துணை இயக்குனர் ஜெயந்தி அறிவுரையின்படி, ஒட்டன்சத்திரம் தாலுகா, சத்திரப்பட்டியில் உள்ள கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வம், தனபால் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது முக கவசம் அணியாத 6 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.100 வீதம் ரூ.600 அபராதமாக விதிக்கப்பட்டது. பின்னர் கடை உரிமையாளர்களிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து அதிகாரிகள் விளக்கி கூறினர்.
Tags:    

Similar News