செய்திகள்
மதுரை-சென்னை ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
சென்னையில் இருந்து மதுரை வரும் வைகை ரெயில் மற்றும் காரைக்குடி - எழும்பூர் பல்லவன் ரெயில் ஆகியவை நவம்பர் 10-ந் தேதி தவிர மற்ற நாட்களில் வழக்கம் போல் இயங்கும்.
மதுரை:
மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக வண்டி எண் 02636 மதுரை - சென்னை எழும்பூர் வைகை ரெயில் மற்றும் சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் ரெயில் ஆகியவை வருகிற 20, 27-ந்தேதிகளில் விழுப்புரம் - எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
இந்த நாட்களில் சென்னையில் இருந்து மதுரை வரும் வைகை ரெயில் மற்றும் காரைக்குடி - எழும்பூர் பல்லவன் ரெயில் ஆகியவை நவம்பர் 10-ந் தேதி தவிர மற்ற நாட்களில் வழக்கம் போல் இயங்கும்.
வண்டி எண் 02635 சென்னை எழும்பூர்- மதுரை வைகை சிறப்பு ரெயில் மற்றும் வண்டி எண் 02606 காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரெயில் ஆகியவை நவம்பர் 10-ந் தேதி (புதன்கிழமை) செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
நவம்பர் 10-ந் தேதியன்று வண்டி எண் 02636 மதுரை -எழும்பூர் வைகை ரெயில் மற்றும் சென்னை எழும்பூர்- காரைக்குடி பல்லவன் ரெயில் ஆகியவை வழக்கம்போல் இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக வண்டி எண் 02636 மதுரை - சென்னை எழும்பூர் வைகை ரெயில் மற்றும் சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் ரெயில் ஆகியவை வருகிற 20, 27-ந்தேதிகளில் விழுப்புரம் - எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
இந்த நாட்களில் சென்னையில் இருந்து மதுரை வரும் வைகை ரெயில் மற்றும் காரைக்குடி - எழும்பூர் பல்லவன் ரெயில் ஆகியவை நவம்பர் 10-ந் தேதி தவிர மற்ற நாட்களில் வழக்கம் போல் இயங்கும்.
வண்டி எண் 02635 சென்னை எழும்பூர்- மதுரை வைகை சிறப்பு ரெயில் மற்றும் வண்டி எண் 02606 காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் சிறப்பு ரெயில் ஆகியவை நவம்பர் 10-ந் தேதி (புதன்கிழமை) செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
நவம்பர் 10-ந் தேதியன்று வண்டி எண் 02636 மதுரை -எழும்பூர் வைகை ரெயில் மற்றும் சென்னை எழும்பூர்- காரைக்குடி பல்லவன் ரெயில் ஆகியவை வழக்கம்போல் இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.