செய்திகள்
திருட்டு

கரூர் அருகே ஆசிரியர் வீட்டில் மடிக்கணினி-செல்போன்கள் திருட்டு

Published On 2021-07-14 17:46 GMT   |   Update On 2021-07-14 17:46 GMT
கரூர் அருகே ஆசிரியர் வீட்டில் மடிக்கணினி-செல்போன்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் காந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் செங்குட்டுவன்(வயது 50). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் செங்குட்டுவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பின்பக்கம் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பால்கனியில் வைக்கப்பட்டிருந்த 3 செல்போன்கள், ஒரு டேப்லட் மற்றும் ஒரு மடிக்கணினி ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து தாந்தோணிமலை போலீசில் செங்குட்டுவன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News