செய்திகள்
டாஸ் சுண்டப்பட்ட காட்சி

டி20 கோப்பைக்கான இறுதி ஆட்டம் ஆரம்பம்- இந்தியா முதலில் பேட்டிங்

Published On 2021-07-29 14:24 GMT   |   Update On 2021-07-29 14:24 GMT
இந்திய அணியில் சந்தீப் வாரியர் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இலங்கை அணியில் காயமடைந்த உதனாவுக்கு பதில் நிசங்காவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு:

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று தொடங்கியது.

போட்டிக்கான டாஸ் 7.30 மணியளவில் சுண்டப்பட்டது. இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் சந்தீப் வாரியர் ஆகியோர் அறிமுகமாகிறார். இலங்கை அணியில் காயமடைந்த உதனாவுக்கு பதில் நிசங்காவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர்கள்: 1.ஷிகர் தவான் (கேப்டன்), 2.ருதுராஜ் கெய்க்வாட், 3.தேவதத் படிக்கல், 4.சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), 5.நிதீஷ் ராணா, 6.புவனேஷ்வர் குமார், 7.சந்தீப் வாரியர், 8.சேத்தன் சாகரியா, 9.குல்தீப் யாதவ், 10.வருண் சக்ரவர்த்தி, 11.ராகுல் சாஹர்.

இலங்கை அணி வீரர்கள்: 1.அவிஷ்கா பெர்னாண்டோ, 2.மினோட் பனுகா (விக்கெட் கீப்பர்), 3.சதீரா சமரவிக்ரமா, 4.தனஞ்செய டி சில்வா, 5.பாதும் நிசங்கா, 6.ரமேஷ் மெண்டிஸ், 7.தசுன் ஷனகா (கேப்டன்), 8.வனிந்து ஹசரங்கா, 9.சமிகா கருணாரத்ன, 10.துஷ்மந்தா சமீரா, 11.அகிலா தனஞ்செயா.
Tags:    

Similar News