செய்திகள்
தங்க சங்கிலி பறிப்பு

ஓசூர் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது

Published On 2021-10-13 10:25 GMT   |   Update On 2021-10-13 10:25 GMT
ஓசூர் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் காந்தி நகரை சேர்ந்தவர் ஷோபா (வயது35). இவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் 6 பவுன் தங்கசங்கிலியை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஓசூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஸ்கூட்டரில் நின்றிருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் பேரிகை பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பதும், ஷோபாவிடம் தங்கச்சங்கிலி பறித்து சென்றவர் என்பதும் தெரியவந்தது. இதையயடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News