செய்திகள்
பேட்மிண்டன் விளையாடிய முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுடன் பேட்மிண்டன் விளையாடிய உத்தரகாண்ட் முதல்வர்

Published On 2020-10-18 08:21 GMT   |   Update On 2020-10-18 08:21 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கான விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்த முதல்வர், அவர்களுடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடி ஊக்கப்படுத்தினார்.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு அரசு சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

அவ்வகையில் டேராடூனில் இன்று நடைப்போட்டி (வாக்கத்தான்) மற்றும் பேட்மிண்டன் போட்டிகள் நடத்தப்பட்டன. நடைப்போட்டியை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கொடியசைத்து துவக்கி வைத்தார். 



மேலும் பேட்மிண்டன் போட்டியையும் முதல்வர் துவக்கி வைத்து, கொரோனாவில் இருந்து மீண்டவர்களுடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடினார். 

இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் முதல்வரும், கொரோனாவில் இருந்து மீண்ட ஒருவரும் ஒரு புறம் களமிறங்க, மறுபுறம் செயலாளர் கேல் பிகே சந்த் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர் விளையாடினர். இந்த ஆட்டத்தில் முதல்வரின் அணி 10-5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. 



நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், கொரோனாவால் பல பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் இதில் இருந்து மீள முடியும் என்றும் கூறினார். கொரோனா நோய்த்தொற்றின் வீதம் குறைந்தபோதிலும்,  நாம் அனைவரும் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News