செய்திகள்
சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அறிவித்தது திமுக
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குழு ஒன்றை அறிவித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் பதவிக்காலம் 2021-ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனையடுத்து தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்காக ஏழு மாதங்களே உள்ள நிலையில் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன.
அந்தவகையில் திமுகவில் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கான குழுவை அக்கட்சியில் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்த தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆ.ராமசாமி உள்ளிட்ட 8 பேர் இடம்பெற்றுள்ளனர்.