செய்திகள்
ஆர்.எஸ்.மாத்தூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
ஆர்.எஸ்.மாத்தூர் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9.45 மணி முதல் பணிகள் முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.
ஆர்.எஸ்.மாத்தூர்:
செந்துறை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் நாளை (7ந்தேதி) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான ஆர்.எஸ்.மாத்தூர், அசாவீரன் குடிக்காடு, இருங்களாக்குறிச்சி, மாறாக்குறிச்சி, குறிச்சிக்குளம், பூமுடையான் குடிக்காடு, முள்ளுக்குறிச்சி, குவாகம், இடையக்குறிச்சி, வல்லம், தாமரைபூண்டி, மணக்குடையான், புதுபாளையம், ஆலத்தியூர், முதுகுளம், கோட்டைக்காடு, ஈச்சங்காடு, தளவாய், சிலுப்பனூர், செங்கமேடு, சேந்தமங்களம். ஆகிய பகுதியில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறிப்பிட்டுள்ளது.