ஆன்மிகம்
பி.கோடுப்பட்டியில் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
பென்னாகரம் அருகே உள்ள பி.கோடுப்பட்டியில் ஜெய்வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பென்னாகரம் அருகே உள்ள பி.கோடுப்பட்டியில் ஜெய்வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காவேரி தீர்த்தம் கொண்டு வருதல், முளைப்பாலிகை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து விநாயகர் பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து சாந்தி பிரவேசபலி, தீபாரதனை கும்ப அலங்காரம், தீபாராதனை, முதற்கால பூஜைகள், வேதபாராயணம், மண்டப பூஜை, அஷ்டபந்தனம் சாத்துதல் நடந்தன. விழாவின் முக்கிய நாளான நேற்று ஆஞ்சநேயருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
தொடர்ந்து விநாயகர் பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து சாந்தி பிரவேசபலி, தீபாரதனை கும்ப அலங்காரம், தீபாராதனை, முதற்கால பூஜைகள், வேதபாராயணம், மண்டப பூஜை, அஷ்டபந்தனம் சாத்துதல் நடந்தன. விழாவின் முக்கிய நாளான நேற்று ஆஞ்சநேயருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.