தொழில்நுட்பம்
ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் வாட்ச் இதையும் செய்யுமா? ஆய்வில் வெளியான புது தகவல்

Published On 2021-02-09 11:45 GMT   |   Update On 2021-02-09 11:45 GMT
ஆப்பிள் வாட்ச் பற்றிய சமீபத்திய ஆய்வில், அது இதையும் செய்யும் என கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.


அமெரிக்காவில் உள்ள மவுண்ட் சினய் மருத்துவமனையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கொரோனாவைரஸ் அறிகுறிகளை ஆப்பிள் வாட்ச் தற்போதைய வழிமுறைகளை விட வேகமாக கண்டறிய முடியும் என தெரியவந்துள்ளது.

ஆப்பிள் வாட்ச் அணிந்திருப்பவரின் இதய துடிப்பு வேறுபாடு விவரங்களை கொண்டு கொரோனாவைரஸ் அறிகுறி ஏற்படுமா என்பதை கண்டறிய முடிந்தது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனாவைரஸ் காலக்கட்டத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும் முன் கண்டறியும் வழிமுறை பெரும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.



ஆய்வில் மவுண்ட் சினய் மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களில் பல நூறு பேர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ஆப்பிள் வாட்ச் அணிந்திருந்தனர். ஆய்வின் போது தினமும் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இதற்கென உருவாக்கப்பட்ட செயலி கொண்டு பதில் அளித்து வந்தனர். 

இந்த ஆய்வு 2020 ஏப்ரல் மாதம் துவங்கி 2020 செப்டம்பர் வரை நடைபெற்றது. இவைதவிர, ஆய்வில் கலந்து கொண்டவர்களின் ஆரோக்கிய விவரங்கள் ஆப்பிள் வாட்ச் கொண்டு சேகரிக்கப்பட்டு வந்தது. அதன்படி பயனரின் நரம்பியல் முறைகளை கணக்கிட்டதில், ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை முன்கூட்டியே கணிக்க முடிந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News