செய்திகள்
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த மத்திய மந்திரி பியூஷ் கோயல், துணை சபாநாயகர் தம்பிதுரை.

திருப்பதியில் பியூஷ் கோயல், தம்பிதுரை சாமி தரிசனம்

Published On 2019-02-22 10:15 GMT   |   Update On 2019-02-22 10:15 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் மத்திய மந்திரி பியூஷ் கோயல், துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். #Tirupati #PiyushGoyal #ThambiDurai
திருமலை:

தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் மத்திய மந்திரி பியூஷ் கோயல், துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் இன்று காலை திருப்பதி வந்தனர்.

அவர்கள் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு பட்டு வஸ்திரம், பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் கோவில் வளாகத்தை பியூஷ் கோயல் சுற்றி பார்வையிட்டார். தம்பிதுரை அவருக்கு இடங்களை சுட்டிகாட்டி விளக்கமளித்தார்.

இதையடுத்து தம்பிதுரை அளித்த பேட்டியில்:- பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. , பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறுவதற்காக ஏழுமலையானை தரிசனம் செய்தோம் என்றார். #Tirupati #PiyushGoyal #ThambiDurai
Tags:    

Similar News