ஆன்மிகம்
வீட்டில் பூஜை

இன்று ஆடி கடைசி செவ்வாய்- விரதம் இருந்தால் திருமண தடை நீங்கும்

Published On 2021-08-10 05:34 GMT   |   Update On 2021-08-10 05:34 GMT
செவ்வாய் தோஷத்தாலும், நாக தோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து ராகு கால பூஜைகளில் பங்கு பெறுவது நல்லது.
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடிமாத செவ்வாய்க்கிழமைகள் அனைத்துமே இறைவழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நாட்களாகும்.

திருமண தடையை ஏற்படுத்தும் செவ்வாய் தோஷம் நீங்க, ஆடி கடைசி செவ்வாய் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது சிறப்பு. பெண்கள் மங்கல கௌரி விரதம் இருந்தால் விஷேச பலன்கள் கைக்கூடும்.

ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையில் மறக்காமல் அம்மனை கண்ணார தரிசித்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

ராகு கால வேளையில் அம்மனை தரிசித்து செவ்வரளி மாலை சாற்றுங்கள். மேலும் துர்க்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள்.

ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையில் அம்மனை தரிசனம் செய்வதால் தடைப்பட்ட மங்கள காரியங்கள் அனைத்தும் இனிதே நடைபெறும்.

பெண்கள் ஆடி கடைசி செவ்வாய்கிழமையில் விரதம் இருநது அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்று நம்புகிறார்கள்.

ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தால் பிற நாட்களில் செய்வதை விட அதிக பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

செவ்வாய் தோஷத்தாலும், நாக தோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து ராகு கால பூஜைகளில் பங்கு பெறுவது நல்லது.

ஆடி செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமின்றி பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு விரதம் கடைபிடிப்பது நல்லது.
Tags:    

Similar News