ஆன்மிகம்
வடலூர் சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம் பக்தர்கள் இன்றி நடந்தது

வடலூர் சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம் பக்தர்கள் இன்றி நடந்தது

Published On 2021-04-21 08:05 GMT   |   Update On 2021-04-21 08:05 GMT
வடலூர் சத்திய ஞானசபையில் இந்த மாத ஜோதி தரிசனம் பக்தர்கள் இன்றி நடந்தது. ஆனால் ஜோதி தரிசனத்தை பக்தர்கள், வள்ளலார் தெய்வ நிலையம் யூடியூப் சேனல் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் சித்திரை மாத பூச ஜோதி தரிசனம் நேற்று இரவு 7.45 மணி அளவில் நடைபெற்றது. கொரோனா 2-வது அலை வேகமாக பரவுவதால் ஜோதியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை.

எனவே இந்த மாத ஜோதி தரிசனம் பக்தர்கள் இன்றி நடந்தது. ஆனால் ஜோதி தரிசனத்தை பக்தர்கள், வள்ளலார் தெய்வ நிலையம் யூடியூப் சேனல் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நோய் பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை, நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜோதி தரிசனத்துக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சரணம் செய்திருந்தார்.
Tags:    

Similar News