ஆன்மிகம்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் வருடாபிஷேகம்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, வருடாபிஷேகம் நடைபெற்றது.
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, வருடாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் புனிதநீர் சேகரிக்கப்பட்ட கலசத்திற்கு விக்னேஸ்வர பூஜை, ருத்ர ஹோமங்கள், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அந்த கலசத்தில் இருந்த புனித நீரால் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் மற்றும் பண்டிதர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் புனிதநீர் சேகரிக்கப்பட்ட கலசத்திற்கு விக்னேஸ்வர பூஜை, ருத்ர ஹோமங்கள், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அந்த கலசத்தில் இருந்த புனித நீரால் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் மற்றும் பண்டிதர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.