உள்ளூர் செய்திகள்
மீன் பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரம் வழங்க வேண்டும் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
மீன் பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரம் வழங்க வேண்டும் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
நாகர்கோவில், ஏப். 16-
தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சி.ஐ.டி.யு.) பொதுச் செயலா ளர் அந்தோணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி தமிழகத் தில் கிழக்கு கடற்கரையில் கடந்த 14-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரையிலும்,
மேற்கு கடற்கரையில் ஜூன் 15-ந் தேதி முதல் ஆகஸ்ட் 14-ந் தேதி வரையி லும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் அமுல் படுத்தப் பட்டு விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
இதற்கான இடைக்கால நிவாரணமாக மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.5 ஆயிரம் போதுமானது அல்ல.
ஏற்கனவே 45 நாட்கள் என்றிருந்த நிலையில் 2017-ம் ஆண்டு முதல் 61 நாட்களாக அறிவிக்கப்பட்டு அமல் படுத்தப்பட்டு வருகிறது.
இக்காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவ தோடு படகுகள் மற்றும் எஞ்ஜின், வலைகளை ரிப்பேர் செய்வதற்கான செலவு களும் அதிகரித்து உள்ளன. வருமானம் இல் லாத நிலையில் மீனவ குடும் பங்கள் பசி பட்டினி யால் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளது.
எனவே நிவாரண தொகையை ரூ.5 ஆயிரத் து-க்கு பதிலாக ரூ.15 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மீனவர்கள் வாழ்க்கை நடத்தவே சிரமப்படுகின்றனர்.
தமிழக அரசு தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்த மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும் என்பதை இந்த ஆண்டே அறிவித்து உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் மீன்பிடி தடைக்கால நிவா ரணமாக ரூ.15 ஆயிரம் என்பதை வரும் ஆண்டிலிருந்து அமுல்படுத்த வேண்டுமென தமிழக முதல்வரையும்,
மீன்வளத்துறை அமைச் சரையும், மீன்வளத்துறை இயக்குனரையும் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.