செய்திகள்
ஷாஹித் அப்ரிடி

இங்கிலாந்து தொடரை டிரா செய்தாலே, பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி: அப்ரிடி சொல்கிறார்

Published On 2020-08-04 10:15 GMT   |   Update On 2020-08-04 10:15 GMT
மூன்று போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை டிரா செய்தாலே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும்  டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

டெஸ்ட் தொடர் மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது. இதற்கு முன் இரண்டு முறை பாகிஸ்தான் இங்கிலாந்து சென்றிருந்தபோது இரண்டு முறையும் தொடரையும் டிரா செய்திருந்தது.

இந்நிலையில் இந்தத் தொடரையும் டிரா செய்தாலே பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஷாஹித் அப்ரிடி கூறுகையில் ‘‘டெஸ்ட் போட்டி என்று வரும்போது இங்கிலாந்து சூழ்நிலை மிகவும் கடினமானது. பாகிஸ்தான் அணி டிரா செய்தாலே அது மிகப்பெரிய என்று நான் நினைக்கிறேன். டிரா வெற்றிக்கு சமமானது. தற்போதுள்ள அணி நிர்வாகம் அணிக்கு மிகப்பெரிய பலம். செசனுக்கு செசன் வீரர்களுக்கு அறிவுரை வழங்குவார்கள் என்ற உறுதி எனக்குள்ளது’’ என்றார்.

மிஸ்பா-உல்-ஹக் (தலைமை பயிற்சியாளர்) மற்றும் யூனிஸ் கான் (பேட்டிங் பயிற்சியாளர்), வக்கார் யூனிஸ் (பந்து வீச்சு பயிற்சியாளர்), முஷ்டாக் அகமது ஆகியோர் அணியுடன் உள்ளனர்.
Tags:    

Similar News