செய்திகள்
போலீசார் விசாரணை

திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் மர்மமரணம்- போலீசில் தந்தை புகார்

Published On 2021-04-08 10:00 GMT   |   Update On 2021-04-08 10:00 GMT
திருவண்ணாமலை அருகே திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்தார். அவர் கணவருடன் ஓட்டுப்போட சென்றபோது மயங்கி விழுந்ததாக கூறப்படுவதால் கோட்டாட்சியர் விசாரணை நடந்து வருகிறது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தாலுகா காட்டாம்பூண்டி மடுவங்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 49). இவரது மகள் மோனிஷா (21). இவருக்கும், அய்யம்பாளையத்தை சேர்ந்த சாமிதுரை என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மோனிஷா ஓட்டு போடுவதற்காக கணவருடன் சென்றபோது மயங்கி விழுந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் இருப்பதாகவும் ஏழுமலைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மோனிஷா தூக்குப்போட்டு இறந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஏழுமலை திருவண்ணாமலை தாலுகா போலீசில் மகள் சாவில் மர்மம் உள்ளதாக புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மோனிஷாவுக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News