செய்திகள்
காரிமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
காரிமங்கலம் பகுதியில் நாளை பராமப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (31-ந் தேதி) நடைபெறுகிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை காரிமங்கலம், நெடுங்கல், அனுமந்தபுரம், திண்டல், அண்ணாமலைஅள்ளி, பந்தாரஅள்ளி, தும்பல அள்ளி, எச்சனஅள்ளி, கெண்டிகானஅள்ளி, கே. மோட்டுப்பட்டி, பெரியாம்பட்டி, பெரியமிட்டஅள்ளி, மாட்லாம் பட்டி, பூமாண்ட அள்ளி, பண்ணந்தூர், காளப்பன அள்ளி, வேலம்பட்டி, பைசுஅள்ளி, நாகரசம்பட்டி, கோவிலுர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை செயற் பொறியாளர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.