செய்திகள்
உசிலம்பட்டி அருகே நகை திருடிய பெண் கைது
உசிலம்பட்டி அருகே நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி- கவுண்டன்பட்டி ரோட்டில் வசித்து வருபவர் குமுதா. இவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டில் வைத்து இருந்த நகை திருட்டு போய்விட்டது. இதுகுறித்து குமுதா அளித்த புகாரின் பேரில் உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் இவர் வீட்டுக்கு அருகில் உள்ள சிவரஞ்சனி(26) என்பவர் குமுதா வீட்டை நோட்டமிட்டு அவர் வீட்டை பூட்டி சாவியை வைக்கும் இடத்தை தெரிந்து கொண்டு உள்ளார். குமுதா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து சாவியை எடுத்து சிவரஞ்சனி 8½ பவுன் தங்க சங்கிலியை திருடியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.