செய்திகள்
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

செங்கம் அருகே தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-08-25 13:15 GMT   |   Update On 2020-08-25 13:15 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா நரசிங்கநல்லூர் கிராமத்தில் நேற்று 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கம்:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா நரசிங்கநல்லூர் கிராமத்தில் நேற்று 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் 2025-ம் ஆண்டுக்குள் 8 வழிச்சாலை போட்டு முடிப்போம் என கூறிய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராக கருப்புக்கொடி, தீப்பந்தங்களை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News