உள்ளூர் செய்திகள்
தோகைமலை அருகே மது விற்ற 2 பெண்கள் கைது
தோகைமலை அருகே மது விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோகைமலை:
தோகைமலை அருகே சட்டவிரோதமாக மதுவிற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் தோகைமலை போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சின்னரெட்டிபட்டியை சேர்ந்த மலர்கொடி (வயது 34), கல்லடை அண்ணா நகரை சேர்ந்த சல்ஜா (33) ஆகியோர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.